"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Tuesday, November 29, 2016

புனைகதை இலக்கியம் பயிலரங்கு



வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் (பருத்தித்துறை) புனைகதை இலக்கியம் தொடர்பான பயிலரங்கு ஒன்றினை (29.11.2016) முழுநாள் நிகழ்வாக ஏற்பாடு செய்தது. நிகழ்வுக்கு இ.த ஜெயசீலன் அவர்கள் தலைமை வகித்தார். பயிலரங்கின் வளவாளர்களாக மூத்த எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் அவர்களும் கலாநிதி சு. குணேஸ்வரன் அவர்களும் கலந்து பயிலரங்கை நிகழ்த்தினர். வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் உயர்தர வகுப்பு பாடசாலை மாணவர்களும் மற்றும் படைப்பாளிகள், ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.