"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Thursday, August 13, 2009

பதிவு - 1 அறிவோர் கூடல் நிகழ்வு


சு. குணேஸ்வரன்

இலங்கை யாழ்ப்பாணம் பருத்தித்துறை து. குலசிங்கம் அவர்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் அறிவோர் கூடல் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நடைபெற்றது. இதன் நான்காவது நிகழ்வு 01.03.2009 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் துவாரகனின் 'மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்' என்ற கவிதைத் தொகுப்புப் பற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் இரா. இராஜேஸ்கண்ணன் விமர்சன உரையாற்றினார்.
நிகழ்வின் தொடக்கத்தில் து. குலசிங்கம் கடித இலக்கியங்களின் தோற்றம் அதன் வளர்ச்சி பற்றிய புதிய செய்தியை எடுத்துக் கூறினார். சிலப்பதிகாரத்தில் மாதவி கோவலனுக்கு எழுதிய மடல் இந்த கடித இலக்கியங்களின் தொடக்கமாக இருக்கின்றன என்றார். ஈழத்தில் கைலாசபதி - சிங்காரம் கடிதங்கள்: குலசிங்கத்தின் கடிதங்களை காலச்சுவடு பிரசுரித்ததை ஞாபகப்படுத்தினார்.
துவாரகனின் கவிதை பற்றிய உரையில் பேச்சாளர் கவிதைகளின் காலம்; அவை எடுத்துக் கொண்ட பொருள்; அவற்றின் அழகியல்; கவிதையின் மொழி பற்றிய கருத்துக்களை மிக நுட்பமாக உதாரணங்களுடன் எடுத்துக் காட்டினார். (இந்நூல் பற்றிய விமர்சனங்கள் இரண்டு திண்ணையில் வெளிவந்தது)
நிகழ்வில் நூலாசிரியர் துவாரகன்; ஓவியர் கோ. கைலாசநாதன்; எழுத்தாளர் இராகவன்; மற்றும் பா. இரகுபரன்: கந்தையா; பாலசுப்பிரமணியம்;ஆகியோருடன் பல படைப்பாளிகளும் இலக்கிய ஆர்வலர்களும் பங்குபற்றினர்.
ஈழத்தின் இறுக்கமான சூழலுக்கு மத்தியிலும் இது போன்ற நிகழ்வுகள் இடம்பெற்று வருவது ஓரளவு மனிதர்களாக வாழ்வதற்கு ஏற்ற நம்பிக்கையைத் தருவதாக நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தார்கள்.

No comments:

Post a Comment