"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Thursday, October 8, 2009

தமிழ் இலக்கிய விழா – 2009

பதிவு - 4

இலங்கை வடமாகாணம் கல்வி அமைச்சு பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்தும் தமிழ் இலக்கிய விழா ஒக்டோபர் 8,9,10 ஆந் திகதிகளில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

மூன்று தினங்கள் இடம்பெறும் இவ் இலக்கிய விழாவில் ஆய்வரங்கு, நடனம், நாடகம், பண்பாட்டுப் பேரணி என்பன இடம்பெறவுள்ளன.

ஆய்வரங்கில் ஈழத்து தமிழ் இலக்கியம், யாழ்ப்பாணத் தமிழ்மன்னர் காலம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கட்டுரைகள் வாசிக்கப்படவுள்ளன.

முதல் நாள்
8ஆம் திகதி காலை 9.00 மணிக்கு ‘ஏ.ஜே கனகரத்தினா’ அரங்கில் நிகழும் ஆய்வரங்கிற்கு பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் தலைமை வகிக்கிறார்.

‘இலக்கியமும் தேசியமும்’ என்ற பொருளில் விரிவுரையாளர் ஈ. குமரன் அவர்களும் ‘இலக்கியமும் சமயமும்’ என்ற பொருளில் விரிவுரையாளர் க. அருந்தாகரன் அவர்களும், ‘இலக்கியமும் கலைகளும்’ என்ற பொருளில் கலாநிதி செ. யோகராசா அவர்களும், ‘இலக்கியமும் அரசியலும்’ என்ற பொருளில் விரிவுரையாளர் பா. அகிலன் அவர்களும் ஆய்வுரைகளை நிகழ்த்தவுள்ளனர்.

பி.ப 2.30 மணிக்கு இடம்பெறும் ‘தா. இராமலிங்கம்’ அரங்கின் நிகழ்வுகளுக்கு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் திருமதி என். சிறீதேவி தலைமை வகிக்கிறார். பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரச அதிபர் திரு க. கணேஷ் அவர்கள் கலந்து கொள்கிறார். கெளரவ விருந்தினர்களாக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு செயலாளர் திரு இ. இளங்கோவன் அவர்கள் கலந்து கொள்கிறார்.

அன்றைய மாலை நிகழ்வுகளில் மீனவ நடனம், பாம்பு நடனம், வள்ளி திருமணம் (இசைநாடகம்), கிராமியக் கதம்பம், யார் குழந்தை (நாட்டுக்கூத்து), என்பன இடம்பெறவுள்ளன.

இரண்டாம் நாள்
9ஆம் திகதி காலை 9.00 மணிக்கு ‘கவிஞர் முருகையன்’ அரங்கில் நிகழும் ஆய்வரங்கிற்கு பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்கள் தலைமை வகிக்கிறார்.

‘இலக்கியமும் மொழியும்’ என்ற பொருளில் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களும், ‘இலக்கியமும் பண்பாடும்’ என்ற பொருளில் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும், ‘இலக்கியமும் வரலாறும்’ என்ற பொருளில் பேராசிரியர் எஸ். புஸ்பரட்ணம் அவர்களும் ஆய்வுரைகளை நிகழ்த்தவுள்ளனர். ஆய்வரங்கின் இறுதியில் கருத்தாடலும் இடம்பெறவுள்ளது.

பி. ப 2.30 மணிக்கு இடம்பெறும் ‘சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி’ அரங்கின் நிகழ்வுகளுக்கு யாழ் மாவட்ட அரச அதிபர் திரு க. கணேஷ் அவர்கள் தலைமை வகிக்கிறார். பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் அவர்கள் கலந்து கொள்கிறார். சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்வித் திணைக்கள மாகாண கல்விப் பணிப்பாளர் திரு வி. இராசையா அவர்கள் கலந்து கொள்கிறார்.

அன்றைய மாலை நிகழ்வுகளில் இசைக்கச்சேரி, கிராமிய பண்பாட்டுக் கதம்பம், குழுநடனம், சத்தியவான் சாவித்திரி (இசைநாடகம்), உழவர் நடனம், சங்கிலியன் (நாட்டுக்கூத்து) என்பன இடம்பெறவுள்ளன.

மூன்றாம் நாள்
10 ஆம் திகதி பி. ப 1.30 மணிக்கு இடம்பெறவுள்ள ‘செ. இராசநாயகம் முதலியார்’ அரங்கிற்கு வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு செயலாளர் திரு இ. இளங்கோவன் அவர்கள் தலைமை வகிக்கிறார். பிரதம விருந்தினராக வடமாகாண கெளரவ ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அவர்கள் கலந்து கொள்கிறார். கெளரவ விருந்தினர்களாக வடமாகாண பிரதம செயலாளர் திரு ஆ. சிவசுவாமி அவர்களும், யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் திரு. க. கணேஷ் அவர்களும் கலந்து கொள்கின்றனர்.

1.30 மணிக்கு இடம்பெறவுள்ள பண்பாட்டுப் பேரணியில் தமிழ் இன்னியம், வேடப்புனைவு,விருந்தினர் வரவேற்பு, பாரம்பரிய கலை நிகழ்வுகள், தமிழ் அன்னை வரவேற்பு என்பன இடம்பெறும். தொடர்ந்து தாண்டவம், தொல் சுப வாத்திய பிருந்தா, ஆகியனவும் 2007,2008 சிறந்த நூல் தேர்விற்கான பரிசில் வழங்கல், மற்றும் 2008,2009 கெளரவ ஆளுநர் விருது வழங்கல் ஆகியனவும் இடம்பெறவுள்ளன.

சு. குணேஸ்வரன்

No comments:

Post a Comment