"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Thursday, April 14, 2011

அன்புக்கரம் கொடுப்போம் - உதவித்திட்ட நிகழ்வு




சுவிஸ் சூரிச் சிவன்கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்புக்கரம் கொடுப்போம் நிகழ்ச்சித்திட்டத்தின் தொடர் பணிகளில் ஒரு நிகழ்வு 14.04.2011 புதுவருட தினத்தன்று மாலை 5.30 மணிக்கு கொற்றாவத்தை பூமகள் சனசமூக நிலைய மண்டபத்தில் திரு அ.அருளானந்தசோதி (தபாலதிபர், கரவெட்டி) தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் கனடாவில் வதியும் திரு திருமதி ஈசன் அவர்கள் புதுவருட தினத்தை முன்னிட்டு 5 பயனாளிகளுக்கு உதவியை வழங்கியுள்ளார்.

நிகழ்வில் முரளிதரன் கோமதி (அரியாலை), கஜந்தன் நிஷாந்தினி (வரணி) ஆகியோருக்கு தையல் இயந்திரங்களும்; திருமதி தியாகராசா சசிகலா (அரியாலை, கோழி வளர்ப்பிற்கு ரூபா இருபத்தையாயிரம்), நவரத்தினராசா ரூபா(விசுவமடு, பழக்கடை வைப்பதற்கு ரூபா இருபதினாயிரம்),விக்னேஸ்வரன் ரூபா (திருகோணமலை, ஆடு வளர்ப்பிற்கு ரூபா இருபத்தையிரம்) ஆகியோருக்கு சுயதொழில் செய்வதற்குரிய உதவித் தொகைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் சு. குணேஸ்வரன் (ஆசிரியர்) கலந்து கொண்டார். நன்றியுரையை பயனாளிகளில் ஒருவராகிய நவரத்தினராசா ரூபா வழங்கினார்.

தேவையறிந்து செயற்படும் மேற்படி சுவிஸ் சூரிச் சைவத்தமிழ் சங்கமும் அதனோடு இணைந்து உதவியைச் செய்த திரு திருமதி ஈசன் (கனடா) அவர்களும் நன்றிக்குரியவர்கள். இதுபோன்ற நல்ல செயற்பாடுகள் இடம்பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.

பதிவு – சு. குணேஸ்வரன்.



No comments:

Post a Comment