"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Saturday, July 18, 2015

ராஜ ஸ்ரீகாந்தன் ஞாபகார்த்த குறும்படப் போட்டியின் விருதுவிழா




அட்சரம் ஏற்பாட்டில் ராஜ ஸ்ரீகாந்தன் ஞாபகார்த்த குறும்படப் போட்டியின் விருதுவிழா 18.07.2015 சனிக்கிழமை மாலை யாழ் பீச் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு சிறப்பு அதிதிகளாக கலை இயக்குநர் மற்றும் ஓவியராகிய ட்றொஸ்கி மருது அவர்களும் இயக்குநர் கவிதாபாரதி அவர்களும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில் ஞானதாஸ், கோ. கேதாரநாதன் ஆகியோரும் அதிதிகளுடன் இணைந்து உரையாற்றினர்.

முதலாம் இடம் பெற்ற குறும்படம் : வெள்ளம் (விமல்ராஜ்)
இரண்டாம் இடம்பெற்ற குறும்படம் : கடிநகர் ( சஜீத்)
மூன்றாம் இடம்பெற்ற குறும்படம் : தொடரி (மதிசுதா)


தனியாள் விருது பெற்ற குறும்படங்கள்

சிறந்த கதைக்கான விருது : சூசைட்
சிறந்த இயக்குநர் விருது : கடிநகர்
சிறந்த நடிகருக்கான விருது : போலி
சிறந்த ஒளிப்பதிவாளர் விருது : வெள்ளம்
சிறந்த இசைக்கான விருது : ஏன் இந்த இடைவெளி
சிறந்த படத்தொகுப்புக்கான விருது : சூசைட்
சிறந்த குழந்தை நட்சத்திற்கான விருது : வெள்ளம், தேவதை
சிறப்பு விருது : ஏன் இந்த இடைவெளி













- பதிவும் படங்களும் : சு.குணேஸ்வரன்

No comments:

Post a Comment