"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, August 30, 2020

கோ. கைலாசநாதனின் ஓவியங்கள் பற்றிய உரையாடல்

 


“உணர்தல் மற்றும் பதிவுசெய்தல்” என்னும் தலைப்பில் ஓவியர் கோ. கைலாசநாதனின் ஓவியங்கள் பற்றிய உரையாடல் 30.08.2020 ஞாயிறு காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் நல்லூரில் சமகால கலை கட்டடக்கலை மற்றும் வடிவமைப்புக்கான இலங்கை ஆவணக் காப்பகத்தில் நடைபெற்றது. மேற்படி உரையாடலில் தா. சனாதனன் அவர்கள் நிகழ்ச்சியை நெறியாள்கை செய்து ஓவியர் கோ. கைலாசநாதனின் கலைச்செயற்பாடு பற்றி உரைநிகழ்த்தினார். கைலாசநாதனின் தெரிவுசெய்யப்பட்ட ஓவியங்கள் திரையில் காட்சிப்படுத்தப்பட்டு அந்த ஓவியங்களை வரைவதற்கான உணர்வுநிலை மற்றும் அவை பற்றி தனது கருத்துநிலை ஆகியவற்றையும் கோ. கைலாசநாதன் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து உரையாடலில் கலந்து கொண்டவர்களின் கருத்துக்களும் பரிமாறப்பட்டன.








No comments:

Post a Comment