"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Thursday, July 14, 2011

கீ.பீ நிதுனின் 'துயரக்கடல்'


புது வரவு


கவிதைநூல் வெளியீடு

கீ.பீ நிதுனின் 'துயரக்கடல்' என்ற கவிதைத் தொகுப்பு நூலின் வெளியீட்டு விழா முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் 14.07.2011 வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. மேற்படி நிகழ்வு கீ. பீட் ஜெயகரன் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் ஆசியுரையை வணபிதா நிருபன் நிசாந் அவர்கள் வழங்கினார். பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட முல்லைத்தீவு கச்சேரி பிரதம கணக்காளர் திரு அ. ஜெயக்குமார் நூலை வெளியிட்டு வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக அருட்சகோதரி யோ. வலன்ரீனா> ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரி அன்ரனி ஜெகநாதன்> முல்லைத்தீவு மகாவித்தியாலய அதிபர் திரு செ. அல்பிரட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நூலின் மதிப்பீட்டுரையை துவாரகனும் சிறப்புரையை தீபச்செல்வனும் நிகழ்த்தினர். ஏற்புரையை நூலாசிரியர் நீ.பீ நிதுன் நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment