"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Saturday, October 30, 2010

சிங்கள - தமிழ் - முஸ்லிம் எழுத்தாளர் ஒன்றுகூடல்


-படங்களும் பதிவும் -சு. குணேஸ்வரன்

சிங்கள தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் ஒன்றுகூடலும் நூல் வெளியீட்டு விழாவும் 25.09.2010 அன்று கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு சிங்கள கலைஞர்கள் 25 பேரும் தமிழ் முஸ்லிம் கலைஞர்கள் 25 பேரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

நிகழ்வில் வரவேற்புரையை கமல் பெரேரா மற்றும் பத்மா சோமகாந்தன் ஆகியோரும்> படைப்பாளிகள் அறிமுகவுரைகளை வஜிர பிரபாத் விஜயசிங்க மற்றும் அந்தனி ஜீவா ஆகியோரும் நிகழ்த்தினர். கவிஞர் மேமன் கவியின் தலைமையில் குழுநிலைக்கலந்துரையாடல் மற்றும் கலை நிகழ்வு ஆகியன இடம்பெற்றன.

படைப்பாளிகள் சந்திப்பு நூல்வெளியீடு என்று இரண்டு நிகழ்வுகளாக இடம்பெற்ற மேற்படி ஒன்றுகூடலில் படைப்பாளிகளை வரவேற்றல்> அறிமுக நிகழ்வு குழுநிலைக்கலந்துரையாடல்> கலை நிகழ்வு> செயலமர்வில் கலந்துகொண்டோர் பரஸ்பரம் நினைவுச் சின்னம் பரிமாறிக்கொள்ளல்> ஆகியன காலை நிகழ்விலும், மாலை நிகழ்வில் அதிதிகள் உரையும் நூல் வெளியீடும் இடம்பெற்றது.

மாலை நிகழ்வுக்கு அதிதிகளாக அமைச்சர் டலஸ் அழகப்பெருமா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் (பா. உ) ஆகியோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். சிறப்புச் சொற்பொழிவாக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ; பேராசிரியர் சபா ஜெயராசா ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன. கலந்து கொண்ட படைப்பாளகளின் விபரம் தாங்கிய 'தீபம்' என்ற நூலும் வெளியிடப்பட்டது.

காலை நிகழ்வில் கலந்துகொள்ள முடிந்ததால் அது சார்ந்த படங்களைக் காணலாம்.








4 comments:

  1. Thangal Muyatchi Paarattuku uriyathu. Nantriyum kooda. Vaalthukal.

    ReplyDelete
  2. புகைப்படங்களுடன் கூடிய தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  3. கே. எஸ். சிவகுமாரன்> டொக்டர் எம்.கே. முருகானந்தன்> மேமன்கவி ஆகியோருக்கு மிக்க நன்றி

    ReplyDelete