"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Monday, November 1, 2010

நிந்தவூர் ஷிப்லி யின் ‘தற்கொலைக் குறிப்பு’




பதிவுசு. குணேஸ்வரன்
ஒளிப்படங்கள்– ஹரிகரன்

நிந்தவூர் ஷிப்லி யின் ‘தற்கொலைக் குறிப்பு’ என்னும் கவிதை நூலின் அறிமுகவிழா 31.10.2010 ஞாயிறு காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் ப.நோ.கூ. சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கி. விசாகரூபன் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறீதரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் நூல் வெளியீட்டுரையை தீபச்செல்வனும், நூல் ஆய்வுரைகளை த. அஜந்தகுமார் மற்றும் துவாரகன் ஆகியோரும் நிகழ்த்தினர். ஏற்புரையையும் நன்றியுரையையும் நூலாசிரியர் நிந்தவூர் ஷிப்லி நிகழ்த்தினார். நிகழ்வினை தெளசீப் அகமட் தொகுத்து வழங்கினார்.

தீபம் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த மேற்படி நிகழ்வின் ஒளிப்படங்கள் சிலவற்றைக் காணலாம்.

தொடர்பு முகவரி :- shiblymis@gmail.com/ shiblyin.blogspot.கம


No comments:

Post a Comment