"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Thursday, November 4, 2010

‘அவை’ - இலக்கியக் கலந்துரையாடல்






பதிவும் படங்களும் - சு. குணேஸ்வரன்

‘அவை’ இலக்கிய அமைப்பின் ஏற்பாட்டில் 31.10.2010 ஞாயிறு மாலை 3.30 மணிக்கு இலக்கியக் கலந்துரையாடல் இடம்பெற்றது. நிகழ்வில் தேசிய கலை இலக்கியப் பேரவைச் செயலாளர் சோ. தேவராஜா உரை நிகழ்த்தினார். மேற்படி நிகழ்வு எழுத்தாளர் தெணியான் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. அறிமுகவுரையை தாயகம் ஆசிரியர் க. தணிகாசலம் அவர்கள் நிகழ்த்தினார்.

‘புத்தகப் பண்பாடு’ பற்றி உரையாற்றிய சோ. தேவராஜா, மிகக் காத்திரமான விடயங்களை நாம் வாசிப்பினூடாகவே அறிந்து கொள்ள முடிகிறது. புத்தகப் பண்பாடு என்பது ஒவ்வொரு வீட்டிலும் பேணப்படவேண்டிய ஒன்று. இன்றைய காலத்தில் வாசிப்பின் தேவையை ஊக்கப்படுத்தும் முகமாக தேசிய கலை இலக்கியப் பேரவையினர் ஊடாக கிராமத்திற்கு 10 பேர் என்ற வகையில் நிகழ்வினை முன்னெடுத்து வருவதாகவும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் எடுத்துரைத்துரைத்தார்.

இந்நிகழ்வில் பலர் தமது கருத்துக்களை முன்வைத்தனர். அக்கருத்துக்களில் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படவேண்டிய நிலை, சிறுவருக்கு ஏற்ற கதைகளை தேடிக்கொடுக்க வேண்டிய தேவை, ஆசிரியர்கள் மட்டத்தில் துறை சார்ந்த வாசிப்புப் போதாமை, ஊர்கள் தோறும் வாசிப்பையும் புத்தகப் பண்பாட்டையும் முன்னெடுக்க வேண்டிய தேவை, ஆகியன குறித்து கலந்துரையாடலில் சிலாகிக்கப்பட்டன.

நிகழ்வில் நன்றிரையை கலாநிதி த. கலாமணி அவர்கள் நிகழ்த்தினார்.

நிகழ்வின் ஒளிப்படங்கள்



No comments:

Post a Comment