"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, November 7, 2010

சி. உதயகுமாரின் ‘செந்நீரும் கண்ணீரும்’


- சிறுகதைத் தொகுதி வெளியீடு

பதிவும் படங்களும் :- சு. குணேஸ்வரன்

சமரபாகு சீனா உதயகுமாரின் ‘செந்நீரும் கண்ணீரும்’ என்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா 06.11.2010 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது. கொற்றாவத்தை செட்டிதறை சித்திவிநாயகர் கல்யாண மண்டபத்தில் கொற்றை பி. கிருஷ்ணானந்தன் தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. வரவேற்புரையை ஆசிரியை தெ. றஜிதா நிகழ்த்தினார்.

நூல் வெளியீட்டுரையை பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் நிகழ்த்தினார். நூலின் முதற்பிரதியை பேராசிரியரிடமிருந்து U.N.H.C.R Field Officer சி. இன்பரூபன் பெற்றுக்கொண்டார்.

நூலின் ஆய்வுரைகளை யாழ் ஸ்கந்தவரோதய கல்லூரி அதிபர் செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் அவர்களும்; யாழ் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் இ. இராஜேஸ்கண்ணனும் நிகழ்த்தினர்.

நூலைப் பதிப்பித்த ஐங்கரன் கிராபிக்ஸ் ஐ. குமரனுக்கு நூலாசிரியரின் வேண்டுதலில் பேராசிரியர் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். நிகழ்வில் ஏற்புரையினையும் நன்றியுரையினையும் நூலாசிரியர் நிகழ்த்தினார். நூல் வெளியீட்டுக்கு மண்டபம் நிறைந்த இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டமை நிறைவாக இருந்தது.

தொடர்பு முகவரி :- சி. உதயகுமார்,
கூனந்தோட்டம்,
சமரபாகு,
வல்வெட்டித்துறை.

1 comment: