"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, October 4, 2015

வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் 30 ஆம் ஆண்டு நிறைவுவிழா



வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் 30 ஆம் ஆண்டு நிறைவுவிழா நிகழ்வுகள் 04.10.2015 ஞாயிறு காலை, நெல்லை முருகன் திருமண மண்டபத்தில் இடம்பெற்றன. சட்டத்தரணி அ.க நடராசா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் “முத்து” என்ற சிறப்பு மலர் வெளியீடு, கவியரங்கம், நடனம் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

மன்னார் மாவட்ட ஓய்வுநிலை அரச அதிபர் திரு வே. விஸ்வலிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். விழாவில் வரவேற்புரையை கழகத் தலைவர் வ.சிவச்சந்திரதேவன் அவர்களும், வாழ்த்துரையை இலங்கைவங்கி ஓய்வுநிலைப் பொது முகாமையாளர் திரு க. பாலசுப்பிரமணியம் அவர்களும், தொடக்கவுரையை வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சி. நந்தகுமார் அவர்களும் நிகழத்தினர். நிகழ்வில் கவிஞர் த. ஜெயசீலன் தலைமையில் கவியரங்கம் இடம்பெற்றது. கவியரங்கில் சித்திரா சின்னராஜன், அ.பௌநந்தி, சு.குணேஸ்வரன் ஆகியோர் பங்குபற்றினர். “முத்து” மலர் பற்றிய உரையை ஓய்வுபெற்ற அதிபர் கி. நடராசா நிகழ்த்தினார்.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.



























Saturday, October 3, 2015

ராஜாஜி ராஜகோபாலனின் “குதிரை இல்லாத இராஜகுமாரன்” நூல் வெளியீடு




    ராஜாஜி ராஜகோபாலனின் “குதிரை இல்லாத இராஜகுமாரன்” என்ற சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு 03.10.2015 மாலை பருத்தித்துறை ஞானாலயத்தில் இடம்பெற்றது. டாக்டர் எம்.கே முருகானந்தன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அறிமுகவுரையை குப்பிழான் ஐ. சண்முகன் நிகழ்த்தினார். நூல் நயப்புரைகளை க.கதிரமலை, த. அஜந்தகுமார் ஆகியோர் நிகழ்த்தினர். நூலின் முதற்பிரதியை இலக்கியச்சோலை து. குலசிங்கம் அவர்களிடமிருந்து வேலாயுதம் மகாவித்தியாலய அதிபர் பெற்றுக்கொண்டார். மேற்படி நிகழ்வு வேலாயுதம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றது.




ராஜாஜி ராஜகோபாலனுடன் பிரபா, மயூரரூபன், 
அஜந்தகுமார், குணேஸ்வரன்ஆகியோர்.