புகலிட இலக்கியச் செயற்பாடு – சுவிஸ் ரவி. றஞ்சி உரை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHIk4X764ID5RnQE0sP44l4UpbIvDkt7UVxhgfc55j1rNQDpG_Hq1tdLNutFuW9GzVxxCKT154r39DvQovcEvIKnPVV7YM5VyWwJHgI5jWCbFTwjwsonv-CbjfaHpORbdADX8UKm2f-x0/s320/ranji+pro1.jpg)
பதிவு:- சு. குணேஸ்வரன்
பருத்தித்துறை இலக்கிய நண்பர்கள் ஒன்று கூடும் அறிவோர் கூடல் நிகழ்வு கடந்த 22.07.2010 அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. புகலிட இலக்கியச் செயற்பாட்டாளர்களாகிய சுவிஸ் ரவி> சுவிஸ் றஞ்சி ஆகியோர் புகலிடத்தின் தற்போதைய இலக்கியச் செயற்பாடுகள் பற்றி விரிவாகப் பேசினர். அவர்கள் தமது உரையில் புகலிட இலக்கியவாதிகளின் இலக்கிய மற்றும் அரசியற் செயற்பாடுகள்> பெண்களின் இலக்கிய சமூகச் செயற்பாடுகள் பற்றி உரையாற்றினர்.
நிகழ்வில் தொடக்கவுரையை இலக்கியச்சோலை து. குலசிங்கமும்> அறிமுகவுரையை சு. குணேஸ்வரனும் நன்றியுரையை த. அஜந்தகுமாரும் நிகழ்த்தினர். உரையின் பின்னர் கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலில் வதிரி சி. ரவீந்திரன்> குலசிங்கம்> குணேஸ்வரன்> அஜந்தகுமார்> இராகவன்> கொற்றை பி. கிருஸ்ணானந்தன்> செ. கணேசன்> கண.எதிர்வீரசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMyJeql6HX12wKJZv29hyTy2mY2ziLNPsrJADcsIouCS3o-Rzo-JW4Cdt6hslVI8NVPwv5LNh_gaWwUzjTelmrvb3xG4g34ligUGV4uCWEnxFJoN7IJIGKzLOOrjlzVGeoUl1GAafX_4I/s320/ranji+pro2.jpg)
இந்நிகழ்வின் தொடர் நிகழ்வாக போரினால் கணவனை இழந்த பெண்களுக்கு உதவும்பொருட்டு ஒரு தொகைப் பணத்தை பருத்தித்துறை அஞ்சலியகத்தில் ஒப்படைப்பதற்குரிய ஏற்பாடு ஒன்று
செய்யப்பட்டிருந்தது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwdP6V-Q6pz-9U7nYsmtyoYT-bSEkCQZqJfRR-pEUUNaTPE6tMdGPu-EnW0XnWVZQIum8YyrfBLPAd1aLzCnEGpRBuJt-73oEwSZgcZoDSkrFS1EzXt_nEyCxzLCun0qOr92tWQkXRG3U/s320/pro1.jpg)
நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் நன்றியுடன் நினைவுகூர்ந்தனர்.
Comments
Post a Comment