"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Tuesday, April 10, 2012

முருகேசு ரவீந்திரனின் “வாழ்க்கைப் பயணம்”


சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா

யாழ் இந்துக்கல்லூரி நண்பர்களின் (உயர்தரம் 1985) ஏற்பாட்டில் முருகேசு ரவீந்திரனின் ‘வாழ்க்கைப் பயணம்’ என்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா இடம்பெறவுள்ளது.

மேற்படி நிகழ்வு நல்லூர் நாவலர் வீதியில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை நிறுவன சொர்ணாம்பிகை மண்டபத்தில் 15.04.2012 ஞாயிறு மாலை 4 மணிக்கு இடம்பெறும்.

நிகழ்வுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலப் போதனாசிரியர் த. அருணகிரிநாதன் தலைமை வகிக்கிறார். சிறப்புரையினை கவிஞர் நா. சத்தியபாலனும் ஆய்வுரையினை மீரா அருள்நேசனும் நிகழ்த்துவர்.


No comments:

Post a Comment