"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Friday, November 8, 2019

கரவெட்டி பிரதேச செயலக பண்பாட்டுப் பெருவிழா – 2019



வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக (கரவெட்டி) பண்பாட்டுப் பெருவிழா 07.11.2019 வியாழக்கிழமை மூத்தவிநாயகர் ஆலய திருமண மண்பத்தில் இடம்பெற்றது. அண்மையில் மறைந்த எழுத்தாளர் கண. மகேஸ்வரன் நினைவாக பெயர்சூட்டப்பட்ட அரங்கில் பிரதேச செயலர் திரு ஈ.தயாரூபன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் யாழ் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு க. கனகேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி அதிபர் திருமதி சி. பாலராணி அவர்களும் கௌரவ விருந்தினராக எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் அவர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உதவிப் பிரதேச செயலர் திருமதி உ. சிவகாமி வரவேற்புரையையும் கலாநிதி சு. குணேஸ்வரன் அரங்கத்திறப்புரையையும் எழுத்தாளர் சீனா உதயகுமார் கலைஞர் கௌரவிப்பு உரையையும் நிகழ்த்தினர். கலைஞர்கள், மாணவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. தேசிய கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றியீட்டிவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் தெரிவு செய்யப்பட்ட பிரதேச கலைஞர்களான திரு ம. கிருஸ்ணகாந்தன் , திருமதி ஜெ. புவனேஸ்வரி , திரு க. தியாகராசா , திரு மா. தர்மராசா , திரு கி. வெள்ளிமலை , ஆகியோர் “கலைஞானவாரிதி” விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். கலாசார உத்தியோகத்தர் திருமதி றோ. மிலாசினி நன்றியுரையை நிகழ்த்தினர்.

பதிவு : சு.குணேஸ்வரன்
படங்கள் : குணேஸ், ஆர்.உதயகுமார்.














































No comments:

Post a Comment