"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Tuesday, May 7, 2024

'இமிழ்' கதைத்தொகுப்பின் அறிமுகமும் விமர்சனமும்

 



பிரான்சில் நடைபெற்ற 51ஆவது இலக்கியச் சந்திப்பில் வெளியிடப்பெற்ற 'இமிழ்' கதைத்தொகுப்பின் அறிமுகமும் விமர்சனமும் யாழ். திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியற் கல்லூரி மண்டபத்தில் 04.05.2024 சனிக்கிழமை இடம்பெற்றது. நிகழ்வுக்கு சு.குணேஸ்வரன் தலைமை வகித்தார். உரைகளை, பேராசிரியர் அ.ராமசாமி, இ.இராஜேஸ்கண்ணன், தானாவிஷ்ணு, மயூரரூபன், கிரிஷாந் ஆகியோர் நிகழ்த்தினர். ஈழம் மற்றும் புலம்பெயர் நாடுகளிலிருந்து எழுதிவரும் 25 படைப்பாளிகளின் சிறுகதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. நிகழ்வின் இறுதியில் பங்குபற்றியோரின் கருத்துரைகளும் இடம்பெற்றன.

(ஒளிப்படங்களுக்கு நன்றி:கருணாகரன், வசீகரன்)

















No comments:

Post a Comment