"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, March 11, 2012

அநாதரட்சகனின் ‘நிமிர்வு’ சிறுகதைத் தொகுதி வெளியீடு



எழுத்தாளர் அநாதரட்சகனின் ‘நிமிர்வு’ என்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா 11.03.2012 ஞாயிறு காலை 9.30 மணிக்கு அல்வாய் சிறீலங்கா வித்தியாசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு எழுத்தாளர் தெணியான் தலைமை வகித்தார். வாழ்த்துரைகளை வே. சிவராஜலிங்கம், க.கணேசன், க. சின்னராஜன் ஆகியோர் நிகழ்த்தினர். வரவேற்புரையை வே. சிவயோகன் நிகழ்த்தினார்.

தாயகம் ஆசிரியர் க. தணிகாசலம் வெளியீட்டுரையினையும் இ.இராஜேஸ்கண்ணன், சு.குணேஸ்வரன் ஆகியோர் மதிப்பீட்டுரையினையும் நிகழ்த்தினர்,

நூலின் முதற்பிரதியினை உதயன் பூட்வெயர்ஸ் மா புவனேந்திரன் பெற்றுக்கொண்டார். ஏற்புரையினை நூலாசிரியர் அநாதரட்சகனும் நன்றியுரையை இராஜவரோதயனும் நிகழ்த்தினர்.

நிகழ்வில் இருந்து சில படங்கள்
















No comments:

Post a Comment